தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்கள் குறித்து மத்தியக்குழுவினர் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய உள்துறை இணைச் செயலர் திரு அசுதோஸ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து பல்வேறு மாவட்டங்களில் நேற்றும், இன்றும் ஆய்வு நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
குயவன்குடி, கழுகூரணி, திருப்புல்லானி, ஆர் எஸ் மங்கலம், நயினார் கோயில் ஆகிய இடங்களில் மத்தியக் குழுவினர் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.