நாட்டில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தற்போது 489 மக்களவை தொகுதிகளில் பாஸ்போர்ட் சேவை மையம் இருப்பதாக கூறினார்.

எஞ்சியுள்ள 54 மக்களவை தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குடிமக்களுக்கு சிறந்த பாஸ்போர்ட் சேவை வழங்க தபால் துறையுடன் இணைந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செயல்படுவதாக அவர் கூறினார்.

தில்லி மற்றும் கொச்சின் பகுதிகளில் முற்றிலும் மகளிரே பணிபுரியும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் இருப்பதை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunchपर Follow करें …

  • Website Designing