நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்ட பயனாளிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய அவர், நாட்டின் முன்னேற்றம், கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாகவும், இதன்மூலம் அவர்கள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து அவமதிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

  • Website Designing