மருத்துவ துறையில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தலைசிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை கொண்ட மருத்துவ தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறினார்.
குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதால், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாகவும் தமிழகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு எத்தகைய மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்பதை பொருத்தே, அம்மாநிலத்தின் முழு சுகாதாரம் அளவிடப்படுவதால், ஏழை மக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதையும் அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.
உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கிடைத்திருப்பதையும் திரு எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்தார்.
  • Website Designing