டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதைபோல, கோவிட் தொற்றும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று கூறினார்.
பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அரசு, கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டதாக கூறிய அவர், தமிழகத்திலும் கோவிட்-19 தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.