தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் இரண்டாயிரத்து 500 ரூபாயை கட்சி பாகுபாடின்றி நியாயவிலைக் கடைகள் மூலமே வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனந்தலை கிராமத்தில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பேசிய அவர்,
அரசின் பணத்தை கொண்டு பொங்கல் பரிசு வழங்குவதற்கு திமுக என்றும் தடையாக இருக்காது என்று கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால், மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
  • Website Designing